செய்திகள்

சர்ச்சுக்கு போக வேண்டாம் என்று முன்னதாகே என் தந்தை கூறினார் - இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு

இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த தேவாலயத்திற்கு போக வேண்டாம் என்று தன் தந்தை கூறியதாக அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #harinfernando #SriLankaBlasts

மாலை மலர்

இலங்கையில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இலங்கை தொலைத் தொடர்புத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், கூறியதாவது:-

உளவு அமைப்புகள் எச்சரிக்கை கொடுத்தும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.’