மழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 
செய்திகள்

நீலகிரியில் கனமழை- வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பலி

நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் இருவரும் பலியாகினர்.

மாலை மலர்

நடுவட்டம்:

கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம், நடுவட்டம் இந்திரா நகரில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், அமுதா (34) அவரது மகள் காவ்யா (10) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். 

இதேபோல் கேரளாவில் கனமழை தொடர்பான விபத்துக்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.