செய்திகள்

முசிறி அருகே மொபட்டில் சென்ற முதியவர் மரத்தில் மோதி பலி

முசிறி அருகே மொபட்டில் சென்ற முதியவர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதி பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

முசிறி:

முசிறி அடுத்த ஏவூர் அந்தரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (60) தொழிலாளி. இவர் கடந்த 1-ம் தேதி தனது மொபட் வண்டியில் முசிறிக்கு வந்தவர் வேலைகள் முடித்து கொண்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்றுள்ளார். 

அப்போது முசிறி அருகே பெரமூர் அய்யனார்கோவில் அருகில் மொபட் வண்டியில் சென்று கொண்டிருந்த துரைராஜ் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதியதில் பலத்த காயம் அடைந்துள்ளார். 

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த வரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்  துரைராஜ் பரிதாபமாக இறந்து போனார். சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.