மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால். மோகன்லால் தனது பெற்றோர் நினைவாக விஸ்வசாந்தி பவுண்டேசன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் நடைபெறும் பணிகளுக்கு ஆதரவு தர கேட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
அப்போது பிரதமர் மோடி, நடிகர் மோகன்லாலின் செயல்பாடுகளை பாராட்டியதோடு, அவரது அமைப்புக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார்.
இந்த தகவலை பிரதமர் மோடியும், நடிகர் மோகன்லாலும் டுவிட்டரில் பதிவிட்டனர். பிரதமர் மோடி டுவிட்டரில் மோகன்லாலை வெகுவாக பாராட்டி கருத்து பதிவிட்டிருந்தார். மோகன்லாலும் பிரதமருடான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியை அளித்ததாக கூறி இருந்தார்.
இதுபற்றி நடிகர் மோகன்லாலிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார்.
மோகன்லால் பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:-
கேரளாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் மோகன்லால் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடும் தவறை செய்யமாட்டார். அவர் ஒரு போதும் இது போன்ற தவறை செய்யமாட்டார் என்று நான் நம்புகிறேன்.
மோகன்லால் ஒரு பிரபல நடிகர். அவரை பலரும் நேசிக்கிறார்கள். அவர் முட்டாள் தனமான முடிவை எடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன், என்றார்.