இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் அதிரடியான குற்றச்சாட்டுகளை கூறினார். ஷமியும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் புகார் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் பெண்ணிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜகான் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இது தொடர்பாக ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.