செய்திகள்

சிலிப் பகுதியில் கேட்ச் பிடிப்பதில் கவனம் தேவை - அசாருதீன்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர்கள் சிலிப் பகுதியில் கேட்ச்சுகளை தவறவிட்டனர். இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியதாவது:- #ENGvIND

மாலை மலர்

அதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை கண்டறிந்து சிலிப் பகுதியில் நிறுத்த வேண்டும். அந்த பகுதியில் நிற்கும் வீரர்கள் தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு வைத்திருக்க வேண்டும். சில சமயம் பந்து மிகவும் தாழ்ந்து வரும் அதுபோன்ற நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். பந்து தலைக்குமேல் செல்லும் போது பாய்ந்து பிடிக்க வேண்டும். இதற்கு நன்கு பயிற்சி செய்ய வேண்டும்.

அதேபோல் சுழற்பந்து வீச்சின்போது சிலிப் பகுதியில் நிற்கும் வீரர் பந்தை கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும்.