செய்திகள்

வீர சவர்க்காருக்கு பிரதமர் மோடி புகழாரம்

புரட்சியையும் கவிதையையும் ஒருசேர சிறப்பாக கையாண்டவர் வீர சவர்க்கார் என பிரதமர் நரேந்திர மோடி இன்று புகழாரம் சூட்டியுள்ளார். #mankibhat #veerSavarkar

மாலை மலர்

புதுடெல்லி:

‘மன் கி பாத்’ என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

இன்றைய உரையில் பாரதத்தின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு மற்றும் வீர் வினாயக் தாமோதர் சவர்க்கார் ஆகியோருக்கு அவர் புகழாஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் முன்னர் சுட்டிக்காட்டியதை இன்று மேற்கோள் காட்டிய மோடி, புரட்சியையும் கவிதையையும் ஒருசேர சிறப்பாக கையாண்டவர் வீர சவர்க்கார் என குறிப்பிட்டார். #mankibhat #veerSavarkar