பிரதமர் மோடி 
செய்திகள்

ஒலிம்பிக்கில் பதக்கம்- மீராபாய் சானுவை தொடர்பு கொண்டு வாழ்த்திய பிரதமர் மோடி

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, எதிர்காலத்தில் மேலும் பல பதக்கங்கள் வெல்ல வேண்டும் என பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

மாலை மலர்

புதுடெல்லி:

டோக்கியோ ஒலிம்பிக்கில், மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், மீராபாய் சானுவை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். எதிர்காலத்தில் மேலும் பல பதக்கங்கள் வெல்வதற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.