கோப்பு படம் 
செய்திகள்

மொடக்குறிச்சி அருகே வியாபாரி தற்கொலை

மொடக்குறிச்சி அருகே வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி கஸ்பாபேட்டை அருகே உள்ள கள்ளகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி (45) வியாபாரி. இவர் குடும்பத்துடன் அவல்பூந்துறையில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் துளசிமணி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துளசிமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட துளசிமணிக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.