சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
லோக்ஆயுக்தா அமைக்க தமிழக அரசுக்கு விருப்பமில்லையா? உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி.
ஜூலை மாதம் கொண்டு வரப்பட்ட அமைப்புக்கு இன்னும் தலைவர் நியமிக்கப்படாமல் இருப்பதில் இருந்தே தெரிகிறது தமிழக அரசின் ஆர்வம்.
ஒருவேளை அமைத்தால், கேபினட் முழுவதுமே சிறைக்குப் போக வேண்டி வரும் என்ற அச்சமோ?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin #Lokayukta