செய்திகள்

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுப்பேன்- முக அழகிரி

அமைதி பேரணி முடிந்த நிலையில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAlagiri

மாலை மலர்

சென்னையில் இருந்து விமானம் மூலம் மு.க. அழகிரி இன்று காலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை மதுரையில் அமைக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஆவின் பால் பண்ணை சாலை சந்திப்பில் அவரது சிலை வைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளோம். சிலை விவரம் குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.