மிசோரம் மாநிலத்தில் முதலமைச்சர் சோரம்தங்கா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், மதுவிலக்கை அமல்படுத்த வகை செய்யும் மசோதாவுக்கு (மிசோரம் மதுபான தடைச் சட்ட மசோதா -2019) அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
எனவே, வரும் 20-ம் தேதி தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, இந்த மதுவிலக்கு மசோதா தாக்கல் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.