சென்னையில் இருந்து இன்று காலை விமானத்தில் அமைச்சர் உதயகுமார் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். அதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தினகரன் தரப்பு அ.தி.மு.க அரசு மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாகவும், அருமையாகவும் செயல்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.