வேலூர்:
தமிழகத்தில் கல்வித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வேலூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், தற்காலிக ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், 41 அரசாணைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் செங்கோட்டையன் அறிவித்தார்.