உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறியதாவது:
பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடைபெறும். பிஇ, பிடெக் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கையும் ஆன்லைனிலேயே நடைபெறும்.
எம்பிஏ, எம்சிஏ முதுநிலை சேர்க்கையும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும்.
நடப்பாண்டு பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் இதுவரை 55,995 பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். இணையதள விண்ணப்பப் பதிவு ஆக. 16ஆம் தேதி நடைபெறும். இணையதள பதிவு முடிவு பெற்றவுடன் ரேண்டம் எண் வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.