அந்தியூர்:
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் அந்தியூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க பெருவாரியான இடத்தில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் செயல்படுவது எப்படி என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை புகையில்லா தீபாவளியாக கொண்டாட அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. சீன பட்டாசுகளை அரசு கட்டுப்படுத்தியிருக்கிறது. தெரியாமல் யாரும் விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையை பொருத்தவரை நடமாடும் காற்று கண்காணிப்பு மையம் உள்ளது. இதன் மூலம் மாசு மற்றும் புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும், அரசு சார்பில் விபத்தில்லா தீபாவளிக்காக கொடுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்களுக்கு இது குறித்து தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #KCKaruppannan #ChinaCrackers