செய்திகள்

மாலி: கண்ணி வெடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

மாலி நாட்டில் வாகனத்தில் சென்றபோது கண்ணி வெடியில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பமாகோ:

மாலி நாட்டில் வாகனத்தில் சென்றபோது கண்ணி வெடியில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு நாடு மாலி. மாலி நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பர்கினா பசோ பகுதியில் இருந்து சந்தையில் பொருள்கள் வாங்க ஏராளமான மக்கள் ஒரு வாகனத்தில் சென்றனர்.

சுரங்கத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், கண்ணி வெடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மீட்பு படையினர் கூறுகையில், சந்தைக்கு சென்ற வாகனம் கண்ணி வெடியில் சிக்கி கொண்டதில் அதில் பயணம் செய்த 4 குழந்தைகள் உள்பட 26 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT