ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபராக சமீபத்தில் அஷ்ரப் கானி மீண்டும் பதவியேற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்ற அப்துல்லா அப்துல்லாவும் அதேநாளில் தன்னை அந்நாட்டின் அதிபராக அறிவித்துள்ளார்.
தற்போது அங்கு இரட்டை அதிகார ஆட்சிமுறை அமலில் இருப்பதுபோல் தோன்றினாலும் உலக நாடுகளில் பெரும்பாலானவை அஷ்ரப் கானி தலைமையைத்தான் அங்கீகரித்துள்ளன.
இந்த அதிகாரப் போட்டிக்கு இடையில் அமெரிக்காவின் ஏற்பாட்டின்பேரில் ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் கடந்த மாதம் ஏற்படுத்திய சமாதான உடன்படிக்கை பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை.