செய்திகள்

மனசாட்சிபடி வாக்களித்தால் மீராகுமார் வெற்றி பெறுவார்: நாராயணசாமி பேட்டி

ஜனாதிபதி தேர்தலில் மனசாட்சிபடி வாக்களித்தால் மீராகுமார் வெற்றி பெறுவார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மாலை மலர்

புதுச்சேரி:

ஜனாதிபதி தேர்தலையொட்டி புதுவை சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வாக்களித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தல் கொள்கை ரீதீயிலான போராட்டம். காங்கிரஸ்- பாரதீயஜனதா வேட்பாளர்களிடையே 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்தான் உள்ளது. மனசாட்சிபடி வாக்களியுங்கள் என்று காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வாக்களித்தால் மீராகுமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.