முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உடல் சிதறி பலியானார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப்படை தாக்குதலிலேயே ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரோனா ஜேக்கப் என்பவர் பிடிபட்டார். அவருடன் மாவோயிஸ்டு இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் 4 பேரும் பிடிபட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மகாராஷ்டிர மாநில போலீசார் ரோனா ஜேக்கப் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும் மனு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பொது மக்களோடு பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உளவு பிரிவினர் மாநில போலீசாரையும் உஷார்படுத்தியுள்ளனர். இனி வரும் காலங்களில் பிரதமர் மோடி பொது மக்களோடு கலந்துரையாடும் நிகழ்ச்சிகளில் மத்திய போலீசாரும் மாநில போலீசாரும் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.