ஒடிசா, சதீஸ்கர் மற்றும் ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளில் உள்ள மாவோயிஸ்டுகள் போலீசார் மீதும், அவர்களுக்கு எதிராக இருக்கும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துவது தற்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவர்களை அழிப்பதற்காகவும், கைது செய்வதற்காகவும் அவர்களின் இருப்பிடமாக கருதப்படும் வனப்பகுதிகளில் போலீசாரும் அதிரடி தேடுதல் வேட்டையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு இன்று தனது ஆதரவாளர்களுடன் எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர் அப்பகுதி மக்களை சந்திக்கச் சென்றனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த 50-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சென்ற உதவியாள் ஒருவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா