கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு அட்டப்பாடி ஆகிய வனப்பகுதிகளில் மாவோயிஸ்டு நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாகும்.
மாவோயிஸ்டுகள் அடிக்கடி ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதும் போலீசார் மீது தாக்குதல், அரசு அலுவலங்ககளை தாக்குவது, வன ஊழியர்களை பிடித்துச்செல்வதுமாக இருந்தனர். அவர்கள் நவீன ரக துப்பாக்கியுடன் போலீசுடன் மோதி வந்தனர்.
இந்நிலையில் கொரில்லா தாக்குதல் நடத்தப்போவதாக பகிரங்கமாக அறிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மாவோயிஸ்டு தடுப்பு போலீசார், தண்டர்போல்டு போலீசார் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை இரவு பகலாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் மாவோயிஸ்டு டேனியஸ் (வயது 30) என்பவர் அட்டப்பாடி அகழி பகுதியில் சுற்றித்திரிவதாக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுஜித் தாசுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் இன்று காலை அகழியில் சுற்றித்திரிந்த டேனியசை கைது செய்தனர்.
டேனியசிடம் விசாரணை நடத்த உயர் போலீஸ் அதிகாரிகள் பாலக்காடு விரைந்துள்ளனர். கொரில்லா தாக்குதல் நடத்த இடம் தேர்வு செய்ய வந்தபோது சிக்கினார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு டேனியஸ் கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் என்றும், கொரில்லா தாக்குதலில் சிறப்பு பயிற்சி பெற்றவர் என்றும் அகழி போலீசார் கூறினர். #tamilnews