இம்பால்:
மணிப்பூர் மாநிலம் தமெங்லாங் மாவட்டம், தாவோபாம் கிராமத்தில் உள்ள இரங் ஆற்றுப் பாலம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. தேசிய நெடுஞ்சாலை 37-இல் இம்பால்-ஜிரிபம் சாலையை இணைக்கும் இந்த பாலம் இடிந்ததால் அந்த பாலத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு லாரி ஆற்றில் விழுந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர், ஆற்றில் விழுந்த லாரியில் சிக்கியிருந்த நபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.