மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.