பிரதமர் மோடி நேற்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் போது தமிழ்நாட்டில் விளையாடப்படும் பல்லாங்குழி விளையாட்டு பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார்.
தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஓய்வாக இருக்கும் மக்களில் பலரும் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள். தமிழ்நாட்டின் பல்லாங்குழி விளையாட்டு கர்நாடகத்தில் ‘அலிகுலி மனே‘ பெயரிலும், ஆந்திராவில் ‘வாமன் குண்ட்லு‘ என்ற பெயரிலும் விளையாடப்படுகிறது.