பின்னர் இந்த செய்து உறுதியானது. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் கும்ப்ளேயின் ஒருவருட பதவிக்காலம் முடிவடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை பயிற்சியாளர் பதவியில் நீடிக்குமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டது.
ஆனால் கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை தேடிவருகிறது. கடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து மகேளா ஜெயவர்தனே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தேர்வாகளாம் என்ற செய்து வெளியானது.
இந்நிலையில் அந்த செய்தியை மகேளா ஜெயவர்தேனா மறுத்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு என்னுடைய பெயரை தொடர்பு படுத்திக் கொள்வதன் மூலம் பெருமை பட்டுக் கொள்ளலாம். ஆனால், தற்போது வரை நான் முழுநேர பயிற்சியாளர் பதவியை எதிர்பார்க்கவில்லை.