கவர்னருடன் உத்தவ் தாக்கரே 
செய்திகள்

மகாராஷ்டிரா கவர்னருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அம்மாநில கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக அவசரகதியில் பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சட்டசபை பலப்பரீட்சையில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால் நேற்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார்.