செய்திகள்

மதுரையில் இன்று ஊதிய உயர்வு கேட்டு முற்றுகை போராட்டம் - 150 பேர் கைது

7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மாலை மலர்

மதுரை:

7-வது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வினை வழங்க வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

ஊதிய உயர்வை அமல் படுத்த வேண்டி முற்றுகை போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டது. அதன் படி மதுரை கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில் இன்று முற்றுகை போராட்டம் நடந்தது.

மதுரை புறநகர் மாவட்ட சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் பொன்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பம்பு ஆபரேட்டர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என 800-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

அப்போது சிலர் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்கள் சாலைக்கு வந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனர். #tamilnews