செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமி அரசு 2 மாதத்தில் கவிழும்: மதுசூதனன் பேட்டி

எடப்பாடி அரசு இன்னும் 2 மாதத்தில் கவிழும் என அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் அவைத்தலைவர் மதுசூதனன் கூறினார்.

மாலை மலர்

அவனியாபுரம்:

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் அவைத்தலைவர் மதுசூதனன் மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக இன்று காலை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் விரும்பினால் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும். ஓ.பன்னீர் செல்வம் பக்கம்தான் மக்கள் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்னும் 2 மாதத்தில் கவிழும். அதன் பின்னர் அந்த அணியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வருவார்கள்.

நத்தம் விசுவநாதன் குறித்து மேலிடத்தில் தவறான தகவலை தெரிவித்து தான் திண்டுக்கல சீனிவாசன் அமைச்சர் பதவியை பெற்றுள்ளார். அவரை பற்றி பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.