அவனியாபுரம்:
அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் அவைத்தலைவர் மதுசூதனன் மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக இன்று காலை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் விரும்பினால் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும். ஓ.பன்னீர் செல்வம் பக்கம்தான் மக்கள் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இன்னும் 2 மாதத்தில் கவிழும். அதன் பின்னர் அந்த அணியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வருவார்கள்.
நத்தம் விசுவநாதன் குறித்து மேலிடத்தில் தவறான தகவலை தெரிவித்து தான் திண்டுக்கல சீனிவாசன் அமைச்சர் பதவியை பெற்றுள்ளார். அவரை பற்றி பேச விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.