பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, வெள்ளை மாளிகை வளாகத்தில் மாக்ரான் மற்றும் டிரம்ப் இணைந்து ஓக் மரக்கன்று ஒன்றை நட்டனர். அப்போது, டிரம்ப் மனைவி மெலேனியா டிரம்ப் மற்றும் மாக்ரான் மனைவி ப்ரிக்கிடி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், இரு தலைவர்களும் இணைந்து நட்ட அந்த மரக்கன்று தற்போது மாயமாகியுள்ளது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, இது தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. மரச்செடியில் ஏராளமான ஒட்டுண்ணிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற செடிகளுக்கு அது பரவி விடக்கூடாது என்பதால் செடி பிடுங்கப்பட்டது,
செடி நடப்பட்ட இடம் தற்போது