உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார். இதுதான் அவருடைய கடைசி ஓட்டமாகும். இந்த தொடருடன் உசைன் போல்ட் ஓய்வு பெறுகிறார்.
இந்த தொடரை நேரில் பார்ப்பதற்காக ரசிகர்கள் டிக்கெட்டுக்களை முன்பதி செய்து வருகின்றனர். தற்போது வரை 6 லட்சத்து 60 ஆயிரம் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உலக சாம்பியன்ஷிப் தடகள தொடரில் அதிக டிக்கெட்டுக்கள் விற்பனை ஆகியது இதுதான் முதன்முறை.