பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரின் துவக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். உறுப்பினர்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது.
மக்களவை காலை 11 மணிக்கு தொடங்கியதும், 2001ல் நடந்த பாராளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கின. அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.