செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாது: எல்.கே.சுதீஷ்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாது என்று திருவண்ணாமலையில் அதன் மாநில துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.

மாலை மலர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் தே.மு.தி.க. கொடியேற்று விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநில துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாது. தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தை பெற்றாலும் அடுத்தடுத்து தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றிபெறாது. வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்றார்.