ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 3-வது நிமிடத்தில் அலெவ்ஸ் அணிக்கு ‘பிரிஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி ஹெர்னாண்டஸ் தியோ சிறப்பாக கோல் அடித்தார். இதனால் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தது.
45-வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த அபாரமான பந்தை நெய்மர் கோலாக்கினார். முதல்பாதி நேரத்தின் கூடுதல் நேரத்தில் மெஸ்சி பாஸ் செய்த பந்தை அல்காசெர் அபாரமாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 3-1 என முன்னிலைப் பெற்றது.