செய்திகள்

சேலம் ஜெயிலில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 30 பேர் விடுதலை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் ஜெயிலில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 30 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

மாலை மலர்

கொண்டலாம்பட்டி:

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிறந்த நாள் மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா சென்னையில் நடக்கிறது.

இந்த நிலையில், எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சேலம் மத்திய ஜெயிலில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 30 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது பெயர் விபரம் வருமாறு:-

1.அய்யனார்

2.செல்வம்

3.ஈஸ்வரன்

4.சேகர்

5.மாது

6.மணிகண்டன்

7.சின்னதுரை

8.சுந்தரம்

9.அய்யனார்

10.வரதராஜன்

11.ஜோசு ஆசீர் சிங்

12.ரவி என்கிற ரவிக்குமார்

13.சுபாஷ்

14.பிரகாஷ்

15.சண்முகம்

16.சின்னதம்பி

17.விஜயசங்கர்

18.நடேசன்

19.குப்புசாமி

20.பத்மநாபன்

21.பெரியண்ணன்

22.புதராசு

23.மண்ணாதன்

24.மணியசாகம்

25.அண்ணாமலை

26.ராஜூ

27.பெரியண்ணன்

28.மாது

29.அபிமன்யூ

30.திம்மராயன்