புதுடெல்லி:
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக செயல்பட்டுவருபவர் பிபின் ராவத். இவர் கடந்த 2016 டிசம்பர் 31-ம் தேதி ராணுவ தலைமை தளபதி பொறுப்பை ஏற்றார்.
இந்நிலையில், பிபின் ராவத்தின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் (டிசம்பர் 31) நிறைவடைகிறது. இதையடுத்து இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1980-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் சீக்கிய லைட் படைப்பிரிவில் தனது ராணுவ சேவையைத் தொடங்கிய மனோஜ் முகுந்த் நரவனே, தற்போது இந்திய ராணுவத்தின் துணை தலைமை தளபதியாக செயல்பட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.