செய்திகள்

பாக். ராணுவம் நடத்திய தாக்குதலில் லஷ்கர் இ ஜான்வி அமைப்பின் தலைவர் உள்பட 3 பேர் சுட்டுக் கொலை

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் லஷ்கர் இ ஜான்வி பயங்கரவாத அமைப்பின் தலைவர் உள்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PakistranMilitary #LashkarEJjhangviChief

மாலை மலர்

கராச்சி:

பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள கில்லி அல்மாஸ் கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் லஷ்கர் இ ஜான்வி பயங்கரவாத அமைப்பின் தலைவர் சல்மான் பதேனி மற்றும் இரண்டு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

விசாரணையில், இந்த அமைப்பினர் பல்வேறு பயங்கரவாத செயலகளில் தொடர்புடையதும்,  சல்மான் பதேனி  அப்பாவி பொதுமக்கள் மற்றும் போலீசார் உள்பட 100க்கு மேற்பட்டோரை கொன்றுள்ளதும் தெரிய வந்தது.  #PakistranMilitary #LashkarEJjhangviChief