செய்திகள்

நெஞ்சுவலி காரணமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஸ்பத்திரியில் அனுமதி

நெஞ்சுவலி காரணமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். #CVShanmugam #ApolloHospital

மாலை மலர்

சென்னை:

தமிழக சட்டத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் சி.வி.சண்முகம் (வயது 45). இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறும்போது, ‘சி.வி.சண்முகத்தின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’ என்றனர்.  #CVShanmugam #ApolloHospital