போலீஸ்காரர் முத்துக்குமார் 
செய்திகள்

ஹெல்மெட்டால் போலீஸ்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீஸ்காரரை ஹெல்மெட்டால் தாக்கிய சட்டக்கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் முத்துக்குமாருக்கும், இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்ற சட்டக்கல்லூரி மாணவர் சரவணனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

அப்போது ஏற்பட்ட மோதலில் போலீஸ்காரர் முத்துக்குமாரை, சரவணன் சரமாரியாக தாக்கினார். ஹெல்மெட்டால் தலையில் ஓங்கி அடித்தார். இதில் முத்துக்குமாரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. எலும்புகளும் முறிந்தன.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கீழ்ப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த போலீஸ்காரர் முத்துக்குமாரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவர் சரவணன் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.