இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த மகளிர் ஒற்றை பிரிவில் செர்பியாவை சேர்ந்த அலெக்சாண்ட்ரா க்ருனியும். ரஷ்யாவை சேர்ந்த எகடரினா மகரோவாவும் மோதினர்.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய மகரோவா முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட க்ருனிக், இரண்டாவது சுற்றில் தனது அதிரடியை காட்டினார். இதனால் சுமார் 24 நிமிடங்களில் 6-1 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் க்ருனிக் மிகவும் சிறப்பாக ஆடினார். இதனால் மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இறுதியில், க்ருனிக் மகவோராவாவை 1-6, 6-1. 6-4 என்ற கணக்கில் வென்று அசத்தினார். டென்னிஸ் தரவரிசையில் க்ருனிக் 53-வது இடம் பிடித்தவர் என்பது குறிபிடத்தக்கது. #Tamilnews