சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பெரம்பூர் தொகுதி வேட்பாளர் பி.வெற்றிவேல் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி வீதி வீதியாகஆதரவு திரட்டி வருகிறார்.
கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஆர்.வி.நகர், சீதாராம்நகர், கட்டம்மன் தெரு, நாராயணசாமி தோட்டம், ஜம்புலி நியூ காலனி உள்ளிட்ட பல இடங்களுக்கு ஆட்டோவில் சென்று ஓட்டு சேகரித்தார்.
கொடுங்கையூர் மக்கள் பிரச்சினையில் அக்கறை கொண்ட அவர் தன்னை மீண்டும் தேர்வு செய்து அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
வீதி வீதியாக சென்ற வேட்பாளர் பி.வெற்றிவேலுக்கு பெண்கள் வீடுகளின் மாடியில் இருந்து மலர்களை தூவி வரவேற்றனர். மீண்டும் வெற்றிவாகை சூட வேண்டும் என்று பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அவருடன் கூட்டணி கட்சி தொண்டர்கள், மகளிர்கள் திரளாக சென்று வாக்கு சேகரித்தனர். நிர்வாகிகள் பழனி, லட்சுமி நாராயணன், எஸ்.எம்.மாரிமுத்து, பி.சி.ராஜு உள்ளிட்டபலர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.#LokSabhaElections2019 #AMMK