வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் பழைய லைட் ஹவுஸ் கீச்சான் ஓடை இடையே கடற்கரையில் 2 அடி நீளமுள்ள சிகப்பு கலர் உருண்டை சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கியது.
இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடலோர காவல் போலீசார் உருளையை கைப்பற்றி சோதனை செய்ததில் அந்த சிலிண்டர் 2 அடி உயரம் கொண்டதும், சிலிண்டர் கப்பலில் தீ அணைக்க பயன்படுத்துவதும் என போலீசார் தெரிவித்தனர்.