செய்திகள்

பெண்கள் பற்றி சர்ச்சை கருத்து- ஹர்தித் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்

பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்தித் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #KLRahul #HardikPandya #BCCI #KoffeeWithKaran

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் 'காபி வித் கரண்' எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ நிர்வாகம் உத்தரவிட்டது. பின்னர் அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, தடை நீக்கப்பட்டு அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.

இந்த அபராத தொகையை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால், அவர்களின் சம்பளத் தொகையில் இருந்து பிசிசிஐ பிடித்தம் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். #KLRahul #HardikPandya #BCCI #KoffeeWithKaran

SCROLL FOR NEXT