திருச்சி:
திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் முருகேசன் (வயது 56). கடந்த 5-ந்தேதி இரவு வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.