செய்திகள்

காஷ்மீரில் வன்முறை செயல்களுக்கு ஆள்திரட்டிய பயங்கரவாதி கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து வன்முறை தாக்குதல்களுக்கு ஆள்திரட்டிய பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர். #KishtwarPolice #wantedterrorist #ReyazAhmed #terroristReyazAhmed

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் சிலர் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். படித்த, வேலையில்லாத இளைஞர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களுக்கு மூளைச்சலவை செய்து, பயங்கரவாதியாக மாற்றி நாடு முழுவதும் வன்முறை தாக்குல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

அவ்வகையில், பயங்கரவாத செயல்களுக்கு ஆள்திரட்டுவதாக தேடப்பட்டுவந்த மிக முக்கிய பிரச்சாரகர் ரேயாஸ் அஹமது என்பவரை கிஸ்த்வார் மாவட்ட போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். #KishtwarPolice #wantedterrorist #ReyazAhmed #terroristReyazAhmed