செய்திகள்

அந்தியூர் அருகே கணவர் கொலையில் மனைவி கைது- கள்ளக்காதலனும் பிடிபட்டான்

அந்தியூர் அருகே கள்ளக்காதல் தகராறில் கணவரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

அந்தியூர்:

அந்தியூர் அருகே புன்னத்தை சேர்ந்த கைலாசம் (வயது40). என்ற லேத் பட்டறை அதிபர் கடந்த 2 நாட்களுக்கு முன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

மனைவி ஹேமலதாவுடன் சென்ற அவரை மர்ம ஆசாமி வழிமறித்து கொலை செய்தான்.

கள்ளக்காதலில் இந்த சம்பவம் நடந்ததை தனிப்படை போலீசார் கண்டு பிடித்தனர்.

மனைவி ஹேமலதாவின் உறவினரான வாலிபர் ஆனந்துக்கும் (23) ஹேமலதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்தனர்.

இதை கணவர் கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆனந்த் சம்பவத்தன்று கைலாசத்தை வழிமறித்து கொலை செய்தார்.

போலீசார் தீவிர விசாரணை நடத்தி மனைவி ஹேமலதா, கள்ளக்காதலன் ஆனந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.