திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில், இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் திருவண்ணாமலை அருகில் உள்ள தட்டரணை கிராம பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பதுக்கி வைத்திருந்த 750 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆங்குணம் பகுதியில் சாராயம் கடத்தியதாக அதேப்பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 45) என்பவரை கைதுசெய்து 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.