திருவனந்தபுரம்:
கேரளாவில் பினராய் விஜயன் மந்திரிசபையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் சைலஜா. கேரளாவில் உள்ள சுய நிதி மருத்துவக்கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான கட்டணத்தை உயர்த்தியதை மந்திரி சைலஜா தடுக்க தவறி விட்டதாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினார்கள். அவரை கண்டித்து சட்டசபை வளாகத்தில் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த நிலையில் மந்திரி சைலஜா பதவி விலகக்கோரி இன்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் அவர்கள் சட்டசபை முன்பு திரண்டு நின்று மந்திரியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.