கென்யாவை சேர்ந்த பெண் ரூத் கமான்டே (24). இவர் பரீத்முகமது (24) என்ற வாலிபரை காதலித்தார். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதையொட்டி நடந்த தகராறில் ரூத் கமாண்டே தனது காதலன் பரீத் முகமதுவை 25 தடவை கத்தியால் குத்தி கொலை செய்தார். எனவே கைது செய்யப்பட்ட அவர் நைரோபி சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்றது.
இந்த நிலையில் பெண் சிறை கைதிகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. அதில் ரூத் கமான்டே அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையே இவர் மீதான வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீரப்பளித்தது.