கதிர்ஆனந்த் 
செய்திகள்

சி.பி.ஐ. விசாரணைக்கும் எனக்கும் சம்மந்தமில்லை- கதிர்ஆனந்த் எம்.பி. பேட்டி

தி.மு.க. பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கதிர்ஆனந்த் எம்பி கூறியுள்ளார்.

மாலை மலர்

வேலூர்:

தி.மு.க. பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது தொடர்பாக கதிர் ஆனந்த் எம்.பி.யிடம் கேட்டபோது எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.

சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று எனது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது விசாரணைக்கு தேவையான சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். விரைவில் விசாரணைக்கு அழைப்போம் அப்போது தவறாமல் ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர் என்றார்.